Skip to main content

Posts

Showing posts from June, 2020

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

(02.07.1958) விஞ்ஞானி பத்மஸ்ரீ. Dr. மயில்சாமி அண்ணாதுரை:  தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராகவும் உள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார், அது சமயம் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனை இவரைச் சாரும்  இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுமாணிப் பட்டம் பெற்றார். அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார். அண்ணாதுரை தனது விடுமுறை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மாணவர்களும் அவரது பேச்சை மிகவும் ஆவலுடன் கேட்கின்றனர். அதனால் இவர் இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். தற்போதைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில்,

சென்னை சில்க்ஸ் அ. குழந்தைவேல் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்                 ⚜️குலத் தோன்றல்⚜️ சுதந்திர போராட்ட வீரர், தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அ. குழந்தைவேல் முதலியார் இவரே சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை, எஸ். சி. எம் குழுமத்தின் நிறுவனர் ஆவர். பிறப்பு இவர் 1926-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் அப்போதைய கோயமுத்தூர் மாவட்டதில் (தற்போதய திருப்பூர் மாவட்டம்) நவவீரர்கள் வம்சமான செங்குந்தர் கைக்கோள முதலியார்(பட்டாளியர் கோத்திரம் பங்காளிகள்) குடும்பத்தில் அமாவாசை முதலியார் - மயங்கம்மாள் தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். இவரது பெற்றோரின் ஆவர்.  இவர் தன் துவக்கக் கல்வியை ஒரு திண்ணைப் பள்ளியில் பயின்றார். மேற்கொண்டு படிக்க குடும்பச் சூழல் இடந்தராததால், தந்தையோடுச் சேர்ந்து, நெசவு தொழிலில் ஈடுபட்டார். வாழ்க்கை குழந்தைவேலுக்கு முழுவது மாக பதினான்கு  வயதுகூட ஆக வில்லை. அதற்குள் அவருக்குள் சுதந்திரத் தாகம் சுரந்து, அவரை ஒரு போராளியாக மாற்றியது. நம் நாட்டில் தயாராகும் கதர் துணிகளையே அனைவரும் அணிய வேண்டும் என மகாத்மா காந்தி அறைகூவல் விடுத்து வந்தது ந

சைவப் பெருவள்ளல் வி.வி.சி.ஆர். முருகேச முதலியார்

சைவப் பெருவள்ளல் என்று, இன்றும் போற்றி புகழுகிற முருகேச முதலியார். இவரை போல, தெய்வ பக்தி கொண்டவர்கள் அக்காலத்தில் மிக சிலரே. இவருக்கும் தொழில், நூல் வியாபாரம் என்றாலும், தம் வருவாயில் பெரும்பகுதியை, இவர் இறைவன் பணிக்கே அர்ப்பணித்தார் என்பதே உண்மை. அந்த காலத்திலேயே இவர் பல கோவில்களுக்கு தர்மகர்த்தாவாக இருந்தார். பழனி கோவிலுக்கு, 25 ஆண்டு காலம் அவர் நிர்வாக அறங்காவலராக இருந்தார். அந்த சமயத்தில் முருகனுக்கு தங்கத் தேர், தங்க மயில், தங்க வேல் போன்றவற்றை செய்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் போன்ற ஸ்தலங்களிலும் இவர் அறங்காவலராக பணியாற்றியுள்ளார். திருப்பதியில் பயணிகள் தங்குவதற்கு, விடுதி கட்டிக் கொடுத்த இவர், திருச்செங்கோடு மலைக் கோவிலுக்கும் முதல் முதலாக மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்தார். மலைப் படிக்கட்டுகளில் இப்போது விளக்கு எரிவது இவரது உபயத்தினால் தான். திருத்தணியில், படி, மண்டபம் கட்டிய இவர், தாம் செய்த காரியங்களுக்காக, விளம்பரம் தேடிக் கொண்டதே இல்லை. ஐயாவின் குடும்பம் பற்றிய தினமலர் கட்டூரை: https://www.dinamalar.c

சேலம். ஏ. மாரியப்பன் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்        ⚜️குலத்தோன்றல்⚜️ நெசவாளர்களின் காவலன் , மக்கள்சேவகர் ஏ. மாரியப்பன் முதலியார். ex MLA (02.08.1920 - 18.07.76) சேலம் தெற்கு தொகுதியின் வளர்ச்சிக்கு முழு காரண்மானவர். 1957 ஆம் ஆண்டில்  சேலம் - I தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழக சட்டமன்றத்தில் ( MLA ) தேர்ந்தெடுக்கப்பட்டார். (சேலம் - I தொகுதி தற்ப்போது இரண்டாக பிரிக்கப்பட்டு சேலம் தெற்கு, சேலம் வடக்கு என்று அழைக்கப்படுகிறது) சேலம் அம்மாப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி இவரால் நிறுவப்பட்டது. சேலம் கூட்டுறவு நூற்பாலையை நிறுவியவறும் இவரே. காந்தியடிகள் மற்றும் காமராஜருடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்டவர். 1952 முதல் 1971 வரை சேலம் அம்மப்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த கூட்டுறவு சங்கம் தமிழ்நாட்டில் மிகப் பழமையானது மற்றும் மிகப்பெரியது. இவர் இந்த சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில்  ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தினார். மாரியப்பன் முதலியாரால் உருவ

முனைவர். வி. முருகேசன்

மேலும் இவரின் பிறந்த தேதி, இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

சி. நடராஜ முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்        ⚜️குலத்தோன்றல்⚜️ பிறப்பு   நன்மனச் செம்மல் சி.நடராஜ நன்தனகாரி அவர்கள் காஞ்சி மாநகரில் செங்குந்த குல பிரமுகராக விளங்கிய சின்ன குழந்தை முதலியார் - கல்யாணி அம்மாள் தம்பதியருக்கு 03.11.1907 அன்று மூன்றாவது மகனாக பிறந்தார். காஞ்சிபுரத்தில் நம் குல முதல் பட்டதாரியாக 1928ல் பி.ஏ. பட்டம் பெற்றார். பேரறிஞர் அண்ணாவும் உடன் படித்தவர். 1932ல் நம் குல முதல் வழக்கறிஞராக பதிவு செய்தார். சென்னை திருவல்லிக்கேணி செங்குந்தர் சங்க செயற்குழு உறுப்பினராக 1930ல் பணிவிடை செய்தார்.  வாழ்க்கை   1937ல் காஞ்சிபுரத்தில் நடந்த செங்குந்த மகாஜன மாநாட்டில் இளைஞர் அணி தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டார். இவருக்கு சி. ந.விஸ்வநாதன் எம்.ஏ.பி.எல்... டாக்டர். சி. ந. சொக்கநாதன், எம்.பி.பி.எஸ். சி.ந. சிவகுமார் பி.ஏ. பி.எல். டாக்டர் சி. ந. ரவீந்திரன் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர்.  நமது தலைமை சங்கத்தில் சி. நடராஜ முதலியாரை அன்புடன் 'சி. என்.' என்று அழைப்பார்கள். அவரது மனைவி கௌரி அம்மாள் தலைமை யில் 09-09-1947ல் மாயவரத்தில் தென்னிந்திய செங்குந்தர் இரண் டாவது மாதர் மாநாடு ந

காஞ்சி நாகலிங்க முனிவர்

செங்குந்தர் கைக்கோள முதலியார்        ⚜️குலத்தோன்றல்⚜️                    (24.10.1894 - 09.07.1950) பிறப்பு முனிவர் அவர்கள் 1864 ஆம் ஆண்டில் ஐப்பசித் திங்கள் 8-ம் நாள் காஞ்சீபுரத்தையடுத்த ஏகனாம் பேட்டையில் பிறந்தார். அவரது தகப்பனார் வாலாஜாபாத் மிலிடரி பாடசாலையில் ஆசிரியராக இருந்த சரவணப்பெருமாள் முதலியார், தாயார் மனோன்மணி அம்மையார்.  வாழ்க்கை முனிவர் தமது 5-ம் வயதில் தமது தந்தையின் மாணவர் கச்சபாலய தேசிகரிடம் கல்வி பயில ஆரம்பித்தார், காஞ்சி நாகல பின்னர் தமது தகப்பனார் இறந்து விடவே அண்மையில் அய்யம் பேட்டையிலிருந்த தமது பாட்டியார் வீட்டிலிருந்து கொண்டு வள்ளுவப் பாக்கம் சீனிவாச முதலியாரிடம் படித்து வந்தார். பன்னிரண்டாம் ஆண்டில் முனிவர் நம் குலத்தொழிலாகிய நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். இரண்டொரு ஆண்டுகளுக்குப் பின்னர், சென்னை கமிசேரியட் ஆபீஸ் மானேஜராக இருந்த (இரங்கூன் முருகேச முதலியார் பேரன்) ஐயம்பேட்டை பஞ்சாட்சா முதலியாரால் சென் னைக்கு அழைக்கப்பட்டுப் பின்னர் சென்னையிலே தங்கி விட்டார்.  சென்னையில் இவரை வளர்த்தவர் செங்குந்த மித்திரனின் முன்னாள் ஆசிரியர் த.சண்முகசுந்தர முதலியார் அவர்க

ஞானியார் அடிகள்

ஞானியார் அடிகள்    இந்தி திணிப்பை எதித்தவர்கள் இன்று பேசப்படுகிறார்கள். இப்போராட்டத்திற்கு மூலவிதையாக இருந்தவர்கள் கால ஓட்டத்தினால் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அப்படியான ஒருவர் தான் ஞானியர் அடிகள். பெரியாரின் குடியரசு இதழ் அலுவலகத்தை திறந்து வைத்தவர் இவர். சமற்கிருத்தையும் இந்தி மொழியையும் ஒருசேர எதித்தவர்.   ஞானியார் அடிகள் (மே 17, 1873- பிப்ரவரி 1, 1942) சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்த துறவி, பேச்சாளர், உரையாசிரியர். மதுரைத் தமிழ்ச்சங்கம் தோன்றுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவர். தமிழிலும், வடமொழியிலும் பெரும் தேர்ச்சிக் கொண்டவர். தமிழையும் சைவத்தையும் ஒன்றாக எண்ணிய இவர் சைவசித்தாந்த பெருமன்றம், வாணிவிலாச சபை போன்ற அமைப்புகளை உருவாக்கினார். இவர் திருக்கோவிலூர் மடத்தின் தலைவராகவும் இருந்தார். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம்அருகே திருநாகேச்சரம் என்ற ஊரில் வீரசைவ மதத்தை பின்பற்றும் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபில் தோன்றிய ஞானியார் அடிகளின் இயற்பெயர் பழனி. இவரின் பெற்றோர் அண்ணாமலை - பார்வதி அம்மையார். இவர் நவம்பர் 20, 1889 அன்று திருக்கோவலூர் திருப்பாதிரிப்புலியூர்மடத்தில்

தமிழறிஞர் க. வெள்ளை வாரணனார் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்        ⚜️குலத்தோன்றல்⚜️ தமிழறிஞர்   க. வெள்ளை வாரணனார் முதலியார் ( 14.01.1917 - 13.06.1988 ) தமிழறிஞர் க. வெள்ளை வாரணனார்: அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலிருந்து தமிழிசைப் பணி ஆற்றியவர். இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களை அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்தவர். யாழ்நூல் விபுலானந்த அடிகளாரால் உருவாக்கப்பட உதவியவருள் இவரும் ஒருவர். இவர் 'இசைத் தமிழ்' என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார். இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத் தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத் தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது. இளமை தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் ஓர் நவவீரர் வம்சமான செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் கந்தசாமி முதலியார் - அமிர்தம் அம்மையார் தம்பதியருக்கு மகவாக 1917ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெள்ளைவாரணனார் பிறந்தார். தம் இளமைக் கல்வியை திருநாகேசுவரத்தில் கற்ற வெள்ளைவாரணனார், திருப்பெருந்து

கவிஞர் நா. முத்துக்குமார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்        ⚜️குலத்தோன்றல்⚜️ 21ஆம்   நூற்றாண்டின் சிறந்த கவிஞர் நா.முத்துக்குமார்  (12.07.1975 - 14.08.2016) நா.முத்துக்குமார் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார். நா. முத்துக்குமார் வாழ்க்கை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார்.  தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார்.  இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் [3], 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்

தமிழறிஞர் சோ. ந. கந்தசாமி முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்        ⚜️குலத்தோன்றல்⚜️ சிறந்த தமிழறிஞர் சோ. ந. கந்தசாமி முதலியார்  (15.12.1936) சோ. ந. கந்தசாமி  சிறந்த தமிழறிஞர். தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் புலமை பெற்றவர். இவர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடியரசுத்தலைவர் வழங்கும் தொல்காப்பியர் விருதை வென்றவர் வாழ்க்கைக் குறிப்பு அறிஞர் சோ.ந.கந்தசாமி முதலியார் எனத் தமிழறிஞர்களாலும் S.N.K என ஆங்கில வல்லாராலும் அழைக்கப்பெறும் கந்தசாமியார் தமிழ்நாடு, அரியலூர், உடையார்பாளையம் வட்டம், செயங்கொண்ட சோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் சோ.நடராச முதலியார், மீனாம்பாள் அம்மாள். கந்தசாமியார் தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார்பாளையம் பள்ளியிலும் பயின்றவர்.  பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளாதாரம்) (1958) பயின்றார். எம்.லிட் (1963), முனைவர் (1971) பட்ட ஆய்வையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர். மொழியியல் பட்டயம், வடமொழிப் பட்டயம் உள்ளிட்ட கல்விய

வில்லாதி வில்லன் பி.எஸ். வீரப்பா முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்        ⚜️குலத்தோன்றல்⚜️ புகழ்பெற்ற திரைப்பட நடிகர்          பி. எஸ். வீரப்பா  ( 9.10.1911 - 9.11.1998) புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அக்காலத்தில் பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்த இவர் திரைப்படத் வீரலட்சுமிவிருது, கலைமாமணி விருது, ராஜீவ் காந்தி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை 1911-ம் ஆண்டு காங்கேயத்தில் ஊர் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்த வீரப்பா பொள்ளாச்சியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார். படிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த போதிலும், அதிகப்படியான குடும்ப உறுப்பினர்களும், குறைந்த குடும்ப வருமானம் இருந்த காரணத்தினாலும் பல சிறு வியாபாரம், தொழில்களில் ஈடுபட்டார்.  சென்னைக்கு வரும் முன்னர் கோயில் திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்களில் நடித்து வந்தார். சிவன்மலையில் அப்படி நடைபெற்ற ஒரு நாடகத்தில் இவரைப் பார்த்த கே. பி. சுந்தராம்பாளும் அவரது சகோதரரும், சென்னைக்கு வருமாறும், திரைப்படங்களில் நடிக்குமாறும் வலியுறுத்தினர். சென்னைக்கு வந்த பிறகு கே. பி. சுந்தராம்பாள் த