Skip to main content

சி. நடராஜ முதலியார்


செங்குந்தர் கைக்கோள முதலியார் 
     ⚜️குலத்தோன்றல்⚜️

பிறப்பு 
நன்மனச் செம்மல் சி.நடராஜ நன்தனகாரி அவர்கள் காஞ்சி மாநகரில் செங்குந்த குல பிரமுகராக விளங்கிய சின்ன குழந்தை முதலியார் - கல்யாணி அம்மாள் தம்பதியருக்கு 03.11.1907 அன்று மூன்றாவது மகனாக பிறந்தார். காஞ்சிபுரத்தில் நம் குல முதல் பட்டதாரியாக 1928ல் பி.ஏ. பட்டம் பெற்றார். பேரறிஞர் அண்ணாவும் உடன் படித்தவர். 1932ல் நம் குல முதல் வழக்கறிஞராக பதிவு செய்தார். சென்னை திருவல்லிக்கேணி செங்குந்தர் சங்க செயற்குழு உறுப்பினராக 1930ல் பணிவிடை செய்தார். 

வாழ்க்கை 
1937ல் காஞ்சிபுரத்தில் நடந்த செங்குந்த மகாஜன மாநாட்டில் இளைஞர் அணி தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டார். இவருக்கு சி. ந.விஸ்வநாதன் எம்.ஏ.பி.எல்... டாக்டர். சி. ந. சொக்கநாதன், எம்.பி.பி.எஸ். சி.ந. சிவகுமார் பி.ஏ. பி.எல். டாக்டர் சி. ந. ரவீந்திரன் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். 

நமது தலைமை சங்கத்தில் சி. நடராஜ முதலியாரை அன்புடன் 'சி. என்.' என்று அழைப்பார்கள். அவரது மனைவி கௌரி அம்மாள் தலைமை யில் 09-09-1947ல் மாயவரத்தில் தென்னிந்திய செங்குந்தர் இரண் டாவது மாதர் மாநாடு நடந்தேறியது. 'சி. என்.' அவர்கள் 05.06.1944 அன்று தஞ்சை கூரை மாநாட்டின் செயலாளராக சிறப்புடன் பணி யாற்றினார். 17.3.1945-ஆம் ஆண்டு ஈரோட்டில் பேராசிரியர் எஸ். மீனாட்சி சுந்தரனார் தலைமையில் நடந்த ஜில்லா மாநாட்டில் 'நன்மனச் செம்மல்' பட்டம் சி. நடராஜ முதலியாருக்கு வழங்கப்பட்டது. சுமார் 30 ஆண்டு காலம் தலைமை சங்க செயலாளராகவும், செங்குந்த மித்ரன் கௌரவ ஆசிரியராகவும் சிறப்புடன் சேவை ஆற்றினார். மதராஸ் பாளையகாட் கம்பெனி உதவியுடன் சென்னை அரண்மனைக்காரன் தெருவில் அமைந்துள்ள செங்குந்தர் மாளிகை தோற்றுவிக்க அரும்பாடுபட்டார். 

1940ல் செங்குந்த கைக்கோளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அரசாங்கம் நீக்க முயன்ற போது மீண்டும் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் தோற்றுவித்த அண்ணல் சபாபதி முதலியாருடன் இணைந்து போராடினார். தன் இறுதிக் காலம் வரை, குலத்தலைவர், கைத்தறிக் காவலர் பத்மஸ்ரீ எம். பி. நாச்சிமுத்துவின் உயிருக்கு உயிர் நண்பனாக வாழ்ந்து காட்டியவர். ஆன்மீக பணியில் சி.என். அவர்கள் தலைவராக செயல்பட்டு ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜனசபை முத்து விழா, திரு. வி. க. நூற்றாண்டு விழா 05.08.1983 ஆம் ஆண்டு சிறப்புடன் நடத்திக் காட்டியவர். 

1940ல் அவரது தலைமையில் ஸ்ரீ சிவசுப்பிரமணிய பக்த ஜனசபை வெள்ளி விழா திரு - வி. க. முன்னிலையில் நடத்தப்பட்டது. அவரது சமுதாய பணியில் திருவல்லிக்கேணி ஸ்ரீ நடராஜ கல்வி கழகம், புளுமவுண்டன் சிட்பண்டு, சைதை நில வளவங்கி, சைதை அன்ன பூரணி பள்ளி, மதராஸ் கைத்தறி கூட்டுறவு சங்க வழக்கறிஞர் ஆகியவற்றிற்கும் மேலாக தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க சேவை அவரது உயிர்நாடியாக விளங்கியது. நன்மனச் செம்மல் சி. நடராஜ முதலியார் நூற்றாண்டு விழா 21.11.2008 அன்று சென்னை மைலாப்பூர் பாரதிய வித்யா பவனில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் உத்யோக ரத்னா ஜெ.சுத்தானந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதியரசர் எல்.நடராஜன் அவர்கள் விழா மலர் வெளியிட நீதியரசர் எஸ். ஜெகதீசன் அவர்கள் சி. நடராஜ முதலியார் திருவுருவப் படத்தை திறந்து வைத்து பேருரை ஆற்றினார். 

அவ் விழாவில் அன்னாரது குடும்பத்தினர் ரூபாய் இரண்டு லட்சம் நன்கொடை மற்றும் சுழற் கேடயம் செங்குந்தர் குல மேம்பாட்டு நிதிக்கு வழங்கப்பட்டது. 1983-ம் ஆண்டு நம் குல குரு வள்ளல் கிருபானந்தவாரியார் மற்றும் நம் குல கர்மவீரர் சி. நடராஜ முதலியார் இருவருக்கும் தென்னிந்திய மகாஜன சங்க புரவலராக கௌரவிக்கப்பட்டது. எளிமை, நேர்மை, நாநயம், பணிவு போன்ற குணங்கள் அவருக்கே உரிய சிறப்பு. ஐம்பது ஆண்டு கால சமுதாய பணியில் சிறப்புடன் செயலாற்றிய சி. என். அவர்கள் தம் 77-ஆம் வயதில் 18-04-1984 அன்று இயற்கை எய்தினார். தற்பொழுது செங்குந்த குல சொந்தங்களை சிறப்புடன் வழிநடத்திச் செல்லும் கைத்தறிக் கதிரவன் திரு. K.P.K.செல்வராஜ் தலைமையில் நம் குல இளைய செங்குந்த சமுதாயத்திற்கு நன்மனச்செம்மல் நடராஜ முதலியார் வாழ்க்கை வரலாறாகத் திகழும். - C.N.சிவக்குமார் செங்குந்தர், சென்னை.

Comments

Popular posts from this blog

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ந

திருநெல்வேலி வி.எஸ். சங்கரசுப்ரமிணிய முதலியார் exMLA

                                         (04.10.1902 - 08.09.1976) பிறப்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 4.10.1902ல் திரு. சுப்பிரமணிய முதலியாருக்கும் திருமதி முத்தமாளுக்கும் திருமகனாகப் பிறந்து வளர்ந்து வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள் ளியில் 8ம் வகுப்பு வரையிலும் நெல்லை சி.எம்.சி, சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு மு டி த் தும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1925ல் பி. பட்டமும், 1928ல் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர்.  வாழ்க்கை & இந்திய சுதந்திர போராட்டம்  வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றவர். கல்லூரியில் படித் த காலத்தில் இராணுவப் பயிற்சி பெற்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் பள்ளி மாணவராக இருக்கும் போதே தேசிய பற்றோடு திலகரின் விடுதலை நிதி திரட்டியும், 1921ல் திரு. டி.ஆர், மகாதேவஅய்யருக்கு உறுதுணையாக இருந்து அம்பை வட்டாரத்தில் பெருமளவில் உறுப்பினர் களைச் சேர்த்தவர், நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றிய ஆரம்பத்திலேயே (1930) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்ன இணைத்துக் கொண்டவர். காந்தி மகானின் கவ

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசுதார். மாசிலாமணி முதலியார் - தாயார் சொர்ணத்தம்மாள். மூன்று குழந்தைகளில் இரண்டாம் குழந்தையாக பிறந்தவர