Skip to main content

Posts

Showing posts from August, 2020

பம்பாய் வரதராஜ முதலியார்

வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (01.03.1926– 02.01.1988)  என்றழைக்கப்படுபவர், தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1960-80களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிழல் உலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். பூர்விகம் இவரின் பூர்விகம் வேலூர் வட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி ஆகும். வாழ்க்கை   தனது 20வது வயதில் ஒருவருடைய ஆலோசனையின் பேரில் தமிழகத்தில் இருந்து மும்பைக்கு வேலை தேடி செல்கிறார்.1945-களில் மும்பை ரயில்வே நிலையத்தில் சுமைதூக்குக் கூலித்தொழிலாளியாக தன்னுடைய ஆரம்ப காலத்தில் வேலை செய்தார்.பின்னர் துறைமுகத்திற்கு வேலைக்கு செல்கிறார்.தங்குவதற்கு இடம் இல்லாததால் தமிழர்களின் மற்றும் தென்னிந்திய மக்கள் மிகுந்த பகுதியான மும்பையில் உள்ள தாராவிக்கு ஒரு சிலருடைய உதவியுடன் செல்கிறார்.தாராவி பகுதி அந்த காலத்தில் வேலைவாய்ப்பு தேடி பஞ்சம் பிழைக்க சென்றவர்களின் பகுதியாகவும், பட்டினி மற்றும் பசி மிகுந்த பகுதியாக இருந்தது.வர்தா துறைமுகத்தில் வேலை செய்தால் முதலில் அங்கிருந்து உணவு பொருட்கள் மற்றும் துணிகளை கடத்தி கொண்டு வந்து த

மன்னர் மன்னன் முதலியார் (தமிழ் அறிஞர்)

செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல் மன்னர் மன்னன் என்கிற கோபதி முதலியார் (இறப்பு: 6 சூலை. 2020) என்பவர் பாரதிதாசனின் ‌ஒரே மகனும், தமிழறிஞரும், எழுத்தாளரும், பேச்சாளரும், விடுதலை போராட்ட வீரரும் ஆவார். வாழ்கை வரலாறு : கோபதி முதலியார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தனது 14 வது வயதில் தனது நண்பரான கவிஞர் தமிழ்ஒளியுடன் இணைத்து `முரசு’ என்னும் கையெழுத்து இதழை வெளியிட்டார். அந்த இதழ் அரசுக்கு எதிராக இருப்பதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தியது புதுச்சேரி பிரெஞ்சு அரசு. அப்போது கோபதிக்கு 14 வயது என்பதால் தண்டனையில் இருந்து தப்பித்துவிட்டார். ஆனால் கவிஞர் தமிழ் ஒளி தண்டிக்கப்பட்டார். அந்த வழக்கில் கோபதி என்ற இயற்பெரில்தான் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அன்றிலிருந்து இவர் மன்னர் மன்னன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். 1947 இல் அந்நிய ஆட்சி அகல வேண்டும் என்று மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரஞ்சு பள்ளியில் இருந்து வெளியேற்றபட்டார். மேலும் இவர் இந்தியாவுடன் புதுவை இணைய வேண்டும் என்று நடந்த போராட்டத்தில் ஈடுபட்டார். 1965 நடந்ந இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து