Skip to main content

மன்னர் மன்னன் முதலியார் (தமிழ் அறிஞர்)



செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல்

மன்னர் மன்னன் என்கிற கோபதி முதலியார் (இறப்பு: 6 சூலை. 2020) என்பவர் பாரதிதாசனின் ‌ஒரே மகனும், தமிழறிஞரும், எழுத்தாளரும், பேச்சாளரும், விடுதலை போராட்ட வீரரும் ஆவார்.


வாழ்கை வரலாறு :
கோபதி முதலியார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தனது 14 வது வயதில் தனது நண்பரான கவிஞர் தமிழ்ஒளியுடன் இணைத்து `முரசு’ என்னும் கையெழுத்து இதழை வெளியிட்டார். அந்த இதழ் அரசுக்கு எதிராக இருப்பதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தியது புதுச்சேரி பிரெஞ்சு அரசு. அப்போது கோபதிக்கு 14 வயது என்பதால் தண்டனையில் இருந்து தப்பித்துவிட்டார். ஆனால் கவிஞர் தமிழ் ஒளி தண்டிக்கப்பட்டார். அந்த வழக்கில் கோபதி என்ற இயற்பெரில்தான் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அன்றிலிருந்து இவர் மன்னர் மன்னன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். 1947 இல் அந்நிய ஆட்சி அகல வேண்டும் என்று மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரஞ்சு பள்ளியில் இருந்து வெளியேற்றபட்டார். மேலும் இவர் இந்தியாவுடன் புதுவை இணைய வேண்டும் என்று நடந்த போராட்டத்தில் ஈடுபட்டார். 1965 நடந்ந இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு 45 நாட்கள் சிறையில் இருந்தார். பின்பு புதுச்சேரி வானொலி நிலையத்தில் பணியாற்றியுள்ளார். வானொலி நிலையத்தில் பணியாற்றியபோது, வானொலியில் பல்வேறு நாடகங்களை தயாரித்து வழங்கியுள்ளார். பாரதிதாசன் குறித்த வரலாற்று நூலான கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல் என்ற நூல் உள்ளிட்ட 50க்கும்‌மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்து அதன் தலைவராக இரண்டுமுறை இருந்துள்ளார். இவரது பதவிக் காலத்தில் தமிழ்ச்சங்கத்திற்கு கட்டடம் கட்டித்தந்தார்.

குடும்பம்
இவர் சாவித்திரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த இணையருக்கு செல்வம், தென்னவன், பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர்.

இறப்பு
உடல் நலக்குறைவால் பாதிக்கபட்ட மன்னர் மன்னன் 2020 சூலை 6 அன்று தன் 92வது வயதில் புதுச்சேரியில் இறந்தார்.

எழுதிய நூல்கள் சில
கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல் (பாரதிதாசனின் வரலாறு)
பாவேந்தர் படைப்புப் பாங்கு
பாவேந்தர் உள்ளம்
பாட்டுப் பறவைகள் (பாரதியின் பத்தாண்டுகால புதுச்சேரி வாழ்வு குறித்து)
நெஞ்சக் கதவுகள் (சிறுகதைகள்)
விருதுகள் தொகு
தமிழக அரசின் திரு.வி.க விருது
தமிழக அரசின் கலைமாமணி விருது
புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி.
புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது

Comments

Popular posts from this blog

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ந

திருநெல்வேலி வி.எஸ். சங்கரசுப்ரமிணிய முதலியார் exMLA

                                         (04.10.1902 - 08.09.1976) பிறப்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 4.10.1902ல் திரு. சுப்பிரமணிய முதலியாருக்கும் திருமதி முத்தமாளுக்கும் திருமகனாகப் பிறந்து வளர்ந்து வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள் ளியில் 8ம் வகுப்பு வரையிலும் நெல்லை சி.எம்.சி, சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு மு டி த் தும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1925ல் பி. பட்டமும், 1928ல் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர்.  வாழ்க்கை & இந்திய சுதந்திர போராட்டம்  வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றவர். கல்லூரியில் படித் த காலத்தில் இராணுவப் பயிற்சி பெற்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் பள்ளி மாணவராக இருக்கும் போதே தேசிய பற்றோடு திலகரின் விடுதலை நிதி திரட்டியும், 1921ல் திரு. டி.ஆர், மகாதேவஅய்யருக்கு உறுதுணையாக இருந்து அம்பை வட்டாரத்தில் பெருமளவில் உறுப்பினர் களைச் சேர்த்தவர், நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றிய ஆரம்பத்திலேயே (1930) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்ன இணைத்துக் கொண்டவர். காந்தி மகானின் கவ

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசுதார். மாசிலாமணி முதலியார் - தாயார் சொர்ணத்தம்மாள். மூன்று குழந்தைகளில் இரண்டாம் குழந்தையாக பிறந்தவர