Skip to main content

சுந்தர சண்முகனார்

 


செங்குந்தர் கைக்கோள முதலியார்
குலத் தோன்றல்
சுந்தர சண்முகனார் 

(13 சூலை 1922 - 30 அக்டோபர் 1997)

இவர் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர், தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர்.

பிறப்பு
 கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் ஊரில்
செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தில் சுந்தரம் முதலியார் – அன்னபூரணி அம்மாள் இணையருக்கு மகனாக 1922 சூலை 13 ஆம் நாள் சுந்தர சண்முகனார் பிறந்தார். இவரது இயற்பெயர் சண்முகம். பின்னாளில் தன் தந்தையின் பெயரைத் தன் பெயருக்கு முன்னர் இணைத்துச் சுந்தர சண்முகனார் ஆனார்.

கல்வி தகுதி:
சுந்தர சண்முகனார் கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தூய வளனார் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். அதேவேளையில் திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியார் மடலாயத்தில் ஐந்தாம் பட்டத்து அடிகளுக்கு மாணவராகச் சேர்ந்தார். அவ்வடிகளின் அறிவுரையின்படி 1936ஆம் ஆண்டில் தனது பதினான்காம் அகவையில் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்துவான் வகுப்பில் சேர்ந்தார். 1939ஆம் ஆண்டில் வித்துவான் பட்டம் பெற்றார். பின்னர் தனியே படித்து இடைநிலை வகுப்பையும் இளங்கலைப் பட்டத்தையும் நிறைவு செய்தார்.
1952 ஆம் ஆண்டில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் தேர்ந்தார்.
இவைதவிர பின்வரும் கல்விச் சான்றிதழ்களையும் சுந்தர சண்முகனார் பெற்றிருந்தார்.

1958ஆம் ஆண்டில் கோயமுத்தூர் பீளைமேட்டில் தமிழக பொதுக்கல்வித்துறை நடத்திய முதியோர் இலக்கியப்பண்ணைச் சான்றிதழ்.

சென்னை சைவ சிந்தாந்தப் பெருமன்றத்தின் சைவ சித்தாந்தச் சான்றிதழ்

தருமபுர ஆதீனம் வழங்கிய சமயக் கல்விப் பயிற்சிச் சான்றிதழ்

புதுச்சேரி பிரஞ்சு இன்சுடிடியூட் வழங்கிய பிரஞ்சு பட்டயம்

தமிழ்ப் பணி:
ஞானியார் அடிகளின் பரிந்துரையைப் பெற்று மயிலம் சிவஞானபாலைய அடிகள் தமிழ்க் கல்லூரியில் தனது பதினெட்டாம் அகவையில் 1940 ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றார். 1946 ஆம் ஆண்டில் கல்லூரியின் துணை முதல்வராகப் பணியாற்றிய நிலையில் தனக்கு ஏற்பட்ட மூளைக்கட்டியின் (Brain Tumor ) காரணமாகப் பணியிலிருந்து விலகினார்.
1947 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் தன் ஓரகத்தான் (தன் மனைவிக்கு உடன்பிறந்தக்கு கணவர்) சிங்கார குமரேசன் உதவியுடன் பைந்தமிழ் பதிப்பகம் என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் 1997 ஆம் ஆண்டு வரை செயற்பட்டது.
1948 ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரை புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 1958ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை புதுச்சேரி அரசினர் ஆசிரியர் பயிற்சி நடுவத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றார்.
தமிழ்நூல் தொகுப்புக்கலை என்னும் நூலின் வழியே தமிழ்நூல் தொகுப்பு முறையியலை சுந்தர சண்முகனார் வரையறுத்திருந்தார். அதனைக் கண்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் அப்பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைத்தலைவர் பதவியை வகிக்குமாறு 1982 ஆம் ஆண்டில் அழைப்புவிடுத்தார். சுந்தர சண்முகர் அவ்வழைப்பையேற்று அப்பணியில் சேர்ந்தார். ஆனால் மூளைக்கட்டி நோய்க்கொடுமை காரணமாக 1983 ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து விலகினார். பின்னர் தனது இறுதிநாள் வரை புதுவையில் தங்கி நூலாக்கப்பணிகளில் ஈடுபட்டார்.
மேலும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கல்விக்குழுவில் வாழ்நாள் உறுப்பினராகப் பணியாற்றினார்.

படைப்புக்கள்:

சுந்தர சுந்தரனார் இடையறாது தொல்லைகொடுத்த நோய்க்கு இடையிலும் நுண்மான் நுழைபுலம் துலங்கப் பல்வேறு துறைகளில் தொடர்ந்து நூல்கள் எழுதினார். அவற்றின் பட்டியல் வருமாறு:

வ.எண்ஆண்டுநூல்பொருள்குறிப்பு
011947வீடும் விளக்கும்வாழ்வியல்
021948குழந்தைப் பாட்டுகவிதை
031948தனித்தமிழ் கிளர்ச்சிகவிதைபாரதிதாசனின் இந்நூலுக்கு முன்னுரைப் பாடல் எழுதியிருக்கிறார்.
041948தமிழ்த் திருநாள் அல்லது பொங்கல் வாழ்த்துக் கீர்த்தனைகள்கவிதை
051948காந்தியின் நாகரிகம்வரலாறு
061948ஆத்திசூடி அமிழ்தம்சிறுகதைகள்
081948 சூலை 30திருக்குறள் தெளிவுரை -1உரைநூல்முதற் படிவ (6ஆம் வகுப்பு) மாணவர்களுக்காக 50 குறள்களுக்கு எழுதப்பட்ட பதவுரை, கருத்துரை, இலக்கணக் குறிப்பு ஆகினவற்றைக் கொண்டது.
09திருக்குறள் தெளிவுரை - 2உரை நூல்இரண்டாம் படிவ (7ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான குறள்களுக்கு எழுதப்பட்ட பதவுரை, கருத்துரை, இலக்கணக் குறிப்பு ஆகினவற்றைக் கொண்டது.
101949 சூலை 1திருக்குறள் தெளிவுரை - 3உரைநூல்மூன்றாம் படிவ (8ஆம் வகுப்பு) மாணவர்களுக்காக 70 குறள்களுக்கு எழுதப்பட்ட பதவுரை, கருத்துரை, இலக்கணக் குறிப்பு ஆகினவற்றைக் கொண்டது.
111949சிறுவர் செய்யுட் கோவைஉரைநூல்கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, பாப்பா பாட்டு, மேலும் சில தனிப்பாடல்களுக்கான தெளிவுரை நூல்
121950வாழ்க்கை ஓவியம்வாழ்வியல்
131951செந்தமிழாற்றுப்படைகவிதை
141954எழுத்தாளர் துணைவன்இலக்கணம்
151957வள்ளுவர் கண்ட மனையறம்திறனாய்வு
161961மலர் மணம்புதினம்
171962வாழும் வழிவாழ்வியல்
181963வள்ளுவர் இல்லம்திறனாய்வு
191964தமிழர் கண்ட கல்விகல்வி இயல்
201964பணக்காரர் ஆகும் வழிபொருளியல்1965ஆம் ஆண்டில் இந்திய அரசின் பரிசு பெற்றது
211964இன்ப வாழ்வுபாலியல்
221965தமிழ் அகராதிக்கலைஅகராதியியல்1969ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசு பெற்றது
231965போர் முயற்சியில் நமது பங்குஅரசியல்இந்திய – பாக்கிசுதான் போரின் பொழுது எழுதியது
241966திருக்குறள் தெளிவுஉரைநூல்திருக்குறள் தெளிவு இதழில் எழுதிய உரைகளின் தொகுப்பு
251967History of Tamil Lexicographyஅகராதியியல்1973ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசு பெற்றது
261969அண்ணா நாற்பதுகவிதைக. ந. அண்ணாதுரையின் மறைவின்பொழுது இயற்றிய கையறுநிலைப் பாடல்கள்
271970தமிழ் இலத்தீன் பாலம்மொழியியல்
281970நாலடியார் நயவுரைஉரைநூல்
291971தொண்ணூறும் தொள்ளாயிரமும்இலக்கணம்
301972தைத் திங்கள்வானியல் ஆய்வு
311972தமிழ்நூல் தொகுப்புக் கலைநூலியல்
321973திருமுருகாற்றுப்படை தெளிவுரைஉரைநூல்
331973புலிசை ஞானியார் அடிகளார்வாழ்க்கை வரலாறு
341975கெடிலக்கரை நாகரிகம்பண்பாட்டு இயல்
351982அம்பிகாவதி காதல் காப்பியம்கவிதை
361984கெடில வளம்பண்பாட்டு இயல்
371986புத்தர் பொன்மொழி நூறுகவிதை
381986கெளதம புத்தர் காப்பியம்கவிதை1987ஆம் ஆண்டில் புதுவை அரசின் ஐயாயிரம் ரூபாய் பரிசு பெற்றது
391987உலகு உய்ய!உலக ஒருமைப்பாடு
401987இனியவை நாற்பது இனியவுரைஉரைநூல்
411987பாரதிதாசரொடு பல ஆண்டுகள்வாழ்க்கை வரலாறு
421988தமிழ்க் காவிரிஅரசியல்
431988கருத்துக் கண்காட்சிஆய்வுக் கட்டுரைகள்
441988இலக்கியத்தில் வேங்கடவேலவன்கோயில் ஆய்வுதிருப்பதி வேங்கடவன் கோயிலைப் பற்றிய ஆய்வு
451988உலகமும் உயிர்களும் உண்டான வரலாறுஅறிவியல் ஆய்வு
461988வழிபாட்டு வரலாறுபண்பாட்டியல்
471988தொல் திராவிட மொழி கண்டுபிடிப்புமொழியியல்
481988கடவுள் வழிபாட்டு வரலாறுமெய்யியல்
491989மக்கள் குழு ஒப்பந்தம்ஆய்வுக் கட்டுரைகள்
501989சுந்தர காண்டச் சுரங்கம்திறனாய்வுகம்பராமயாணத்தின் சுந்தர காண்டத்தைப் பற்றிய திறனாய்வு
511989மருந்தாகித் தப்பா மர இனப்பெயர்கள்: மர இனப் பெயர்த் தொகுதி - 1தாவர இயல்பெயரியல் ஆய்வு
521989நன்னெறி நயவுரைஉரைநூல்
531990சுந்தர காண்டச் சூறாவளிமதிப்புரைக்குப் பதில்சுந்தர காண்டச் சுரங்கம் பற்றி மற்றவர்கள் எழுதிய மதிப்புரைக்கு எழுதிய விடையுரை
541990அயோத்தியா காண்ட ஆழ்கடல்திறனாய்வுகம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தைப் பற்றிய திறனாய்வு
551990மர இனப் பெயர் வைப்புக்கலை: மர இனப் பெயர்த் தொகுதி - 2தாவர இயல்பெயரியல் ஆய்வு
561990தெய்விகத் திருமணம்புதினம்
571990தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்நூற்றொகை1992 ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசும் 1994ஆம் ஆண்டில் சென்னை மு. அ. சி. அறக்கட்டளை பரிசும் பெற்றது.
581991ஆழ்கடலில் சில ஆணிமுத்துக்கள்திறனாய்வுதிருக்குறள் பற்றிய திறனாய்வு
591991பால காண்டப் பைம்பொழில்திறனாய்வுகம்பராமாயணத்தின் பாலகாண்டத்தைப் பற்றிய திறனாய்வு
601991மாதவம் புரிவாள்: மர இனப் பெயர்த் தொகுதி - 3தாவர இயல்பெயரியல் ஆய்வு
611991முதுமொழிக் காஞ்சி உரைஉரைநூல்
621992இயல்தமிழ் இன்பம்ஆய்வுக் கட்டுரைகள்
631992மனத்தின் தோற்றம்ஆய்வுக் கட்டுரைகள்
641992கிட்கிந்தா காண்டத் திறனாய்வுதிறனாய்வுகம்பராமாயணத்தின் கிட்கிந்தா காண்டத்தைப் பற்றிய திறனாய்வு
651992சிலம்போ சிலம்பு – தித்திக்கும் திறனாய்வுதிறனாய்வுசிலப்பதிகாரத்தைப் பற்றிய திறனாய்வு
661993தமிழ் அங்காடிதிறனாய்வுக் கட்டுரைகள்
671993ஆரணிய காண்ட ஆய்வுத்திறன்திறனாய்வுகம்பராமாயணத்தின் ஆரணிய காண்ட ஆய்வுத்திறன்
681993நல்வழி உரைஉரைநூல்
691993ஞானியார் அடிகள்வாழ்க்கை வரலாறு
701993விளையும் பயிர் முளையிலே தெரியும்வாழ்க்கை வரலாறு

மேற்கண்டவை தவிர பல்வேறு சூழ்நிலைகளில் இயற்றப்பட்ட தனிப்பாடல்களும் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் இருக்கின்றன.

இவருடைய இப்படைப்புகள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன


இதழ்கள்

1949 சனவரி 23 ஆம் நாள் தொடங்கி சில ஆண்டுகள் திருக்குறள் தெளிவு என்னும் திங்களுக்கு இருமுறை இதழை வெளியிட்டார். ஒவ்வொரு இதழிலும் திருக்குறள்கள் சிலவற்றிற்கு ஆராய்ச்சி விரிவுரை எழுதினார்.இவ்வுரை இதழ்கள் தொகுக்கப்பட்டு 1963ஆம் ஆண்டில் வள்ளுவர் இல்லம் என்னும் நூலாக வெளியிடப்பட்டது. இவ்விதழில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கள் பேறு ஆகிய மூன்று அதிகாரங்களில் உள்ள முப்பது குறட்பாகளுக்கு எழுதிய ஆராய்ச்சி விரிவுரைகள் முழுமையாகப் பேராசிரியர் சு. ச. அறவணனால் தொகுக்கப்பட்டு 2004 ஏப்ரல் 26 ஆம் நாள் வள்ளுவர் கண்ட மனையறம் என்னும் நூலாக வெளியிடப்பட்டுள்ளன.

1958 அக்டோபர் 22 ஆம் நாள் தொடங்கி சில ஆண்டுகள் தெவிட்டாத திருக்குறள் என்னும் திங்களுக்கு இருமுறை இதழை வெளியிட்டார். ஒவ்வொரு இதழிலும் திருக்குறளின் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்னும் வைப்புமுறையில் ஒவ்வொரு பாலிலும் உள்ள சில குறள்களுக்கு ஆராய்ச்சி விரிவுரை எழுதினார். அவ்வாறு எழுத்தப்பட்ட உரைகளில் 51 குறள்களுக்கான உரைகளைத் தொகுத்து 1991 நவம்பர் 5 ஆம் நாள் ஆழ்கடலில் சில ஆணிமுத்துக்கள் என்னும் நூலாக வெளியிட்டார்.

திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக் கழகம்
1966 சூன் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்பிற்கு அரசின் பதிவையும் பெற்றார். இவ்வமைப்பின் வழியே திருக்குறள், யாப்பிலக்கண வகுப்புகளை நடத்தினார். அவ்வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார்.

வானொலி உரைகள்:
சண்முக சுந்தரனார் வாய்ப்புக் கிடைத்த பொழுதெல்லாம் வானொலியில் இலக்கியப் பேருரைகள் ஆற்றினார். அவற்றுள் சில:

குற்றாலக் குறவஞ்சி, 1949 மே 10ஆம் நாள், இரவு 7:30 மணி முதல் 7:45 மணி வரை, திருச்சி வானொலி நிலையம்.

குடும்பம்:
சுந்தர சண்முகனார் தனது இருபத்திரண்டாவது அகவையில் 1944 மே 26 ஆம் நாள் புதுச்சேரியைச் சேர்ந்த விருத்தாம்பிகை அம்மையாரை மணந்தார்.இவ்விணையர்களுக்கு சு. ச. அறவணன் என்னும் மகனும் அங்கயற்கண்ணி என்னும் மகளும் பிறந்தனர்.

பெற்ற பட்டங்கள், விருதுகள்:
சுந்தர சண்முகனார் 1951ஆம் ஆண்டில் செந்தமிழாற்றுப்படை என்னும் நூலை இயற்றி அரங்கேற்றிய பொழுது, நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அந்நூலிற்கு எழுதிய சிறப்புப் பாயிரத்தில் “சுதை இயற்கவி சுந்தர சண்முகர்” எனக் குறிப்பிட்டார்.பின்னர் சோமசுந்தர பாரதியாரின் பரிந்துரையை ஏற்று, புதுக்கல்விக் கழகம் இயற்கவி எனப் பட்டம் வழங்கியது
இவர் திருக்குறள் தெளிவுரை, திருக்குறள் தெளிவு, தெவிட்டாத திருக்குறள் ஆகிய வெளியீடுகளின் வழியாகவும் தன்னுடைய நூல்கள் பலவற்றிலும் திருக்குறளின் மேன்மையை எடுத்துரைத்தார். இத்தகு திருக்குறள் பரப்பும்பணியைப் பாராட்டித் தமிழக அரசு 1991 சனவரி 15 ஆம் நாள் இவருக்குத் திருவள்ளுவர் விருது வழங்கியது.
இவர் பல துறைகளிலும் நூல்கள் எழுதிய சான்றாண்மையைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 1991 அக்டோபர் 17ஆம் நாள் இவருக்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் பட்டத்தை வழங்கியது.
இவைதவிர பின்வரும் பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார்:
ஆண்டுவிருதுவழங்கியோர்செந்தமிழ்ச் செம்மல்புதுவைத் தமிழ்ச் சங்கம்1972புதுப்படைப்புக் கலைஞர்தமிழ்நூல் தொகுப்புக் கலை வெளியீட்டுவிழாவில் அன்றைய புதுவை ஆளுநரைக்கொண்டு திரு. கு. கா. இராசமாணிக்கம் வழங்கினார்.செந்தமிழ்க் கொண்டல்புதுவை சுப்பிரதீபக் கவிராயர் மன்றம்ஆராய்ச்சி அறிஞர்சிவத்திரு ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர்தமிழ்ச் சான்றோர்சேலம் தமிழ்ச் சங்கம் (தமிழகப் புலவர் குழுவின் வெள்ளி விழாவின் பொழுது)திருக்குறள் நெறித்தென்றல்தமிழக அரசுகுறளாயச் செல்வர்ஈரோடு குறளாய இயக்கத்தின் புதுவைக் கிளை வழங்கியதுதமிழ் ஆய்வுக்கடல்தமிழகச் செங்குந்தர் பெருமன்றம்முனைவர்உலகப் பல்கலைக் கழகம், அமெரிக்கா.

மறைவு:
1946ஆம் ஆண்டு முதலே மூளைக்கட்டி நோயோடு போராடிக்கொண்டிருந்த சுந்தர சண்முகனார் 1997 அக்டோபர் 30 ஆம் நாள் புதுச்சேரியில் காலமானார்.

நினைவேந்தல்கள்:
சுந்தர சண்முகனாரின் மாணாக்கர்களான சொல்லாய்வுச் செல்வர் சு. வேல்முருகன், பாட்டறிஞர் இலக்கியன், புலவர் திருவேங்கடம், பாவலர் ஆ. மு. தமிழ்வேந்தன் ஆகியோர் இணைந்து 1998 மார்ச் 22 ஆம் நாள் சுந்தர சண்முகனார் நினைவுக் கருத்தரங்கம் ஒன்றை புதுச்சேரியில் நடத்தினர்.
இவர்தம் மாணாக்கர்களும் மகன் சு. ச. அறவணனும் இணைந்து சுந்தர சண்முகனார் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி புதுச்சேரியில் திங்கள்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த அறக்கட்டளையினர் 2009 நவம்பர் 12 ஆம் நாள் சுந்தர சண்முகனார் நினைவுக் குறுந்தகடு ஒன்றினை புதுச்சேரியில் வெளியிட்டனர்.




மேலும் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

Comments

Popular posts from this blog

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ந

திருநெல்வேலி வி.எஸ். சங்கரசுப்ரமிணிய முதலியார் exMLA

                                         (04.10.1902 - 08.09.1976) பிறப்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 4.10.1902ல் திரு. சுப்பிரமணிய முதலியாருக்கும் திருமதி முத்தமாளுக்கும் திருமகனாகப் பிறந்து வளர்ந்து வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள் ளியில் 8ம் வகுப்பு வரையிலும் நெல்லை சி.எம்.சி, சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு மு டி த் தும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1925ல் பி. பட்டமும், 1928ல் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர்.  வாழ்க்கை & இந்திய சுதந்திர போராட்டம்  வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றவர். கல்லூரியில் படித் த காலத்தில் இராணுவப் பயிற்சி பெற்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் பள்ளி மாணவராக இருக்கும் போதே தேசிய பற்றோடு திலகரின் விடுதலை நிதி திரட்டியும், 1921ல் திரு. டி.ஆர், மகாதேவஅய்யருக்கு உறுதுணையாக இருந்து அம்பை வட்டாரத்தில் பெருமளவில் உறுப்பினர் களைச் சேர்த்தவர், நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றிய ஆரம்பத்திலேயே (1930) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்ன இணைத்துக் கொண்டவர். காந்தி மகானின் கவ

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசுதார். மாசிலாமணி முதலியார் - தாயார் சொர்ணத்தம்மாள். மூன்று குழந்தைகளில் இரண்டாம் குழந்தையாக பிறந்தவர