Skip to main content

Posts

Showing posts from September, 2020

சுந்தர சண்முகனார்

  செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத் தோன்றல் சுந்தர சண்முகனார்  (13 சூலை 1922 - 30 அக்டோபர் 1997) இவர் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர், தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர். பிறப்பு  கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் ஊரில் செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தில் சுந்தரம் முதலியார் – அன்னபூரணி அம்மாள் இணையருக்கு மகனாக 1922 சூலை 13 ஆம் நாள் சுந்தர சண்முகனார் பிறந்தார். இவரது இயற்பெயர் சண்முகம். பின்னாளில் தன் தந்தையின் பெயரைத் தன் பெயருக்கு முன்னர் இணைத்துச் சுந்தர சண்முகனார் ஆனார். கல்வி தகுதி: சுந்தர சண்முகனார் கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தூய வளனார் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். அதேவேளையில் தி

விபி. சிவக்கொழுந்து MLA (புதுச்சேரி சபாநாயகர்)

செங்குந்தர் கைக்கோள முதலியார்  சமூகத்தில் பிறந்த வி. பி. சிவக்கொழுந்து  காங்கிரஸ் கடிச்சியில் அடிமட்ட தொண்டனாக இருந்து கட்சியில் வளர்ந்தவர்  இவர் 2016 பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு MLA வாக வெற்றிப்பெற்று பின்பு பாண்டிச்சேரி சட்டமன்றத்தின் அவைதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  22 ஜூலை இவரின் பிறந்தநாள் 

முத்துசாமி முதலியார் (நீல்கிரிஸ் நிறுவனம்)

சென்னை, கோவையில், பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருப்பவர்கள் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட் என்றாலே சட்டென தெரிந்து கொண்டுவிடுவார்கள். வெறும் 56 ரூபாய் முதலீட்டில் ஆரம்பமான இந்த நிறுவனம் இன்று பல நூறு கோடி ரூபாய் புரளும் பிஸினஸாக மாறியிருப்பது ஆச்சரியமூட்டும் வளர்ச்சி. இந்த வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் முத்துசாமி முதலியார் மற்றும் அவரது மகன் சென்னியப்ப முதலியார். பிறப்பு : திருப்பூருக்கு அருகே இருக்கும் முரட்டுப் பாளையம் நெசவாளர்கள் நிரம்பிய கிராமம். இந்த கிராமத்தில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகம் சொக்கநாதன் கோத்திரம் பங்காளிகள் சவாளியின் மகனாக பிறந்தார் முத்துசாமி முதலியார்.  வாழ்க்கை : இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், வேலை தேடி நீலகிரிக்குப் போனார். அங்கு சில கடைகளில் வேலை பார்த்தவருக்கு, தபால்களை எடுத்துச் செல்லும் வேலை கிடைத்தது. வெலிங்டனிலிருந்து குன்னூருக்கு தபால்களை தினமும் எடுத்துச் சென்றவருக்கு ஒரு பிஸினஸ் வாய்ப்பு தேடி வந்தது. அந்த சமயத்தில் பட்டேல் என்பவர் குஜராத்திலிருந்து வெண்ணெய்யை வரவழைத்துத் தந்து கொண்டிருந்தார். இவ்வளவு தூரத்திலிருந்து வெண்ணெய் கொண்டு வ