Skip to main content

டி.பி. ஆறுமுகம் exMLA


(28.07.1929 - 18.08.2014)
பிறப்பு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமுகத்தில் வீரபத்திரன் கோத்திரம் பங்காளிகள் தோக்கவாடியார். ரங்கசாமி முதலியார் - மீனாட்சியம்மன் தம்பதியரின் பேரனும், ர. பச்சியண்ணன் - வகிள்ளியம்மாள் தம்பதியரின் மகனாக (28.07.29) அன்று டி.பி. ஆறுமுகம் பிறந்தார்.

வாழ்க்கை: 
கல்வி படித்து முடித்து தனலட்சுமி அம்மாள் என்பவரை திருமணம் செயதார்.

இவருக்கு மல்லிகாதேவி, பூங்கோதை, ராஜேஸ்வரி, மோகனசுந்தரி, யசோதா, தங்கமணி என்று மொத்தம் ஆறு பெண் குழந்தைகள். 

தனது குழத்தொழிலான ஜவுளி தொழிலை சிறப்பாக செய்து "திருமகள் சைசிங் மில்" என்று நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வந்தார்

சிறு வயதில் இருந்து அரசியலில் ஆர்வம் உள்ள இவர் திமுக கட்சி யில் இணைந்து பணியாற்றி பல கட்சி பதவிகளில் இருந்தார்.

1967ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக சார்பில் க. அன்பழகன் திருச்செங்கோடு மக்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டர். தொகுதிக்கு சமபநத்தம் இல்லாத க. அன்பழகனுக்கு தீவிர பிரச்சாரம் செய்து தேர்தலில் க. அன்பழகனை டி.பி. ஆறுமுகம் வெற்றிப்பெறச் செய்தார்.

கட்சியில் சிறப்பாக உழைத்து திமுக சார்பில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் பதவிக்கு இரண்டு முறை போட்டியிட்டு 12ஆண்டுகள் நகர்மன்ற தலைவராக சிறப்பாக பணியாற்றினார். (1967-1976) (1986-1991)

நகர்மன்ற தலைவராக இருந்த போது சிறப்பாக பணியாற்றி மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார். பல நூறு ஆண்டுகளாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. பல நூறு ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாத 
அர்த்தநாரீஸ்வரர் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.

சிறப்பாக நகர்மன்ற தலைவராக பணியாற்றிய காரணத்தால் 1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக வெற்றிப்பெற்றார். 

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்க்காக திருச்செங்கோட்டு செங்குந்தர் பொறியியல் கல்லூரி ஆரம்பித்து 16 ஆண்டுகள் அதன் செய்யலாளராக இருந்தார்.

19ஆண்டுகள் திருச்செங்கோடு செங்குந்தர் கல்வி அறக்கட்டளையின் செய்யலாளராக பணியாற்றினார்.

72 செங்குந்தர் நாட்டின் ஒன்றான எழுக்கரை நாட்டின்(திருச்செங்கோடு) நாட்டாண்மைக்காரராக 27 ஆண்டுகள் பணியாற்றினார்.

ஐயா தலைமையில் கட்டிய செங்குந்தர் கல்லூரியின் ஒரு பகுதி


திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், டி.பி. ஆறுமுகம் பற்றி பேசும் YouTube காணொளி.

இவரின் 
கூட்டம் பெயர்: வீரபத்திரன் கோத்திரம்
குலதெய்வம்: பழனி முருகன் மற்றும் பச்ச்யாம்மன்,  மலை அடிவாரம், திருச்செங்கோடு.


மேலும் இவரின் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

Comments

Popular posts from this blog

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ந

திருநெல்வேலி வி.எஸ். சங்கரசுப்ரமிணிய முதலியார் exMLA

                                         (04.10.1902 - 08.09.1976) பிறப்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 4.10.1902ல் திரு. சுப்பிரமணிய முதலியாருக்கும் திருமதி முத்தமாளுக்கும் திருமகனாகப் பிறந்து வளர்ந்து வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள் ளியில் 8ம் வகுப்பு வரையிலும் நெல்லை சி.எம்.சி, சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு மு டி த் தும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1925ல் பி. பட்டமும், 1928ல் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர்.  வாழ்க்கை & இந்திய சுதந்திர போராட்டம்  வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றவர். கல்லூரியில் படித் த காலத்தில் இராணுவப் பயிற்சி பெற்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் பள்ளி மாணவராக இருக்கும் போதே தேசிய பற்றோடு திலகரின் விடுதலை நிதி திரட்டியும், 1921ல் திரு. டி.ஆர், மகாதேவஅய்யருக்கு உறுதுணையாக இருந்து அம்பை வட்டாரத்தில் பெருமளவில் உறுப்பினர் களைச் சேர்த்தவர், நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றிய ஆரம்பத்திலேயே (1930) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்ன இணைத்துக் கொண்டவர். காந்தி மகானின் கவ

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசுதார். மாசிலாமணி முதலியார் - தாயார் சொர்ணத்தம்மாள். மூன்று குழந்தைகளில் இரண்டாம் குழந்தையாக பிறந்தவர