Skip to main content

புலவர் கா. கோவிந்தன் முதலியார்

                                
                                 (15.04.1915 - 01.07.1991)

புலவர் கா. கோவிந்தன் முதலியார்  (ஏப்ரல் 15, 1915 - சூலை 1, 1991) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழிலக்கிய உலகில் மிகச்சிறந்த அறிஞராக விளங்கித் தமிழகச் சட்டப்பேரவையில் தலைவராக அமர்ந்து கடமையாற்றி அனைவராலும் மதிக்கத் தகுந்தவராக விளங்கியவர் தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவராக இருமுறையும், துணைத்தலைவராக ஒருமுறையும் பணியாற்றியுள்ளார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்துக்கு தொடர்ந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.


பிறப்பு:
புலவர் கோவிந்தனின் பெற்றோர் காங்கேய முதலியார் - சுந்தரம் அம்மையார் ஆவர். அவரது குடும்பம் நெசவும், உழவும் செய்து வந்தது. கோவிந்தன் செய்யாற்றில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். 1934 இல் பள்ளி இறுதி வகுப்பில் தேறினார். 1940 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்வான் பட்டம் பெற்றார். 1941 இல் சேலத்தில் பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.


வாழ்க்கைக் குறிப்பு:
சிறுவயது முதல் தனித்தமிழ் இயக்கத்திலும் நீதிக்கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் (திமுக) தொடங்கிய போது அதில் இணைந்தார். 1952 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆதரவு வேட்பாளருக்காக செய்யாறு பகுதியில் பிரச்சாரம் செய்தார். 1958 இல் திருவத்திபுரம் (செய்யாறு) பேரூராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 சட்டமன்றத் தேர்தலில் செய்யாறுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1967, 1971 மற்றும் 1977 தேர்தல்களிலும் அதே தொகுதியிலிருந்து திமுக சார்பாகப் போட்டியிட்டு வென்றார். 1967-69 இல் சட்டமன்றத் துணைத்தலைவராகப் பணியாற்றினார். 1969-71 மற்றும் 1973-77 காலகட்டங்களில் சட்டமன்றத் தலைவராகப் பணியாற்றினார். 

கோவிந்தன், திமுக வில் பல கட்சிப் பொறுப்புகளை வகித்துள்ளார். அக்கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறை சென்றார். தமிழக அரசு அவரது நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளது.

1932 இல் எட்டாம் வகுப்புப் பயின்றொழுது வீரபத்திரப்பிள்ளையிடம் படித்தவர்.அவர் மாற்றலாகி வேலூருக்குச் சென்றபொழுது அந்த இடத்திற்கு ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை அவர்கள் பணிக்கு அமர்ந்தார்.அவரிடம் தமிழ் இலக்கிண இலக்கியங்களை வகுப்பிலும் தனியாகவும் கற்றுப் புலமை பெற்றவர்.1934 இல் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றவர். துரைசாமிப் பிள்ளையின் ஊக்கத்தால் பத்துப்பாட்டு,எட்டுத்தொகையினை நன்கு கற்றவர்.


கோவிந்தனார் 1935 இல் காவிரி என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதற்கண் வெளிவரச் செய்தவர்.வாலி வழக்கு என்ற நூல் எழுதிய புரிசை முருகேச முதலியார் அவர்கள் முன்னின்று நடத்திய பானுகவி மாணவர் கழகம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளில் மாணவப் பருவத்தில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர் புலவர்.படிக்கும் காலத்திலேயே கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை,ஞானியார் அடிகள்,மறைமலையடிகள் உள்ளிட்டவர்களுடன் பழகிய பெருமைக்கு உரியவர்.செய்யாறு பகுதியில் தமிழ் உணர்வு தழைத்து வளரப் பாடுபட்டவர்களில் புலவரின் பங்களிப்பு மிகுதி. இவருக்கு அணுக்கமாக இருந்தவர் மாவண்ணா தேவரசான் அவர்கள் ஆவார்.

மாவண்ணா தேவராசன் பெரியார் பிள்ளைத்தமிழ் எழுதிய பெருமைக்கு உரியவர்(என் முனைவர் பட்ட ஆய்வேடு,பொன்னி பாரதிதாசன் பரம்பரை நூலில் இவர் பற்றி விரித்து எழுதியுள்ளேன்)

1942 இல் வேலூரில் தம் ஆசிரியர் பணிபுரிந்த அதே பள்ளியின் பணியில் புலவர் இணைந்து பணிபுரிந்தார்.1944 வரை பணி தொடர்ந்தது.தமிழில் வித்துவான் பட்டம் பெற்ற பின்னர் பி.ஓ.எல்.பட்டம் பெற்றவர்.தமிழ் ஆங்கில மொழிகளில் வல்லவர்.

வேலூரில் பணிபுரிந்துகொண்டிருந்தபொழுது கழக ஆட்சியர் சுப்பையா பிள்ளை அவர்கள் சென்னையில் தெ.பொ.மீ.தலைமையில் கூட்டிய நற்றிணை மாநாட்டில் உரையாற்ற அழைத்தார்.அதன் பிறகு அவரின் நட்பு வளர்ந்தது.பல நூல்கள் கழகம் வழி வெளிவர அந்தச்சந்திப்பு காரணமானது.

புலவரின் முதல் நூலான திருமாவளவன் என்னும் நூல் 1951 இல் வெளிவந்தது.அதன் பிறகு சங்க காலப்புலவர் வரிசை என்ற வரிசையில் 16 நூல்களையும் அரசர் என்ற வரிசையில் ஆறு நூல்களையும் வெளியிட்டார்.புலவர் வரிசையின் முதல்நூல் 1952 இலும்,அரசர் வரிசையில் கடைசி நூல் 1955 இலும் வெளிவந்தன.

மலர் நிலையம், வள்ளுவர் பண்ணை, அருணா பதிப்பகம் வழியும் புலவரின் நூல்கள் வெளிவந்தன.1990 ஏப்ரல் 15 இல் புலவரின் ஐம்பதாவது நூலான பி.டி.சீனிவாச ஐயங்காரின் தமிழர் வரலாறு வெளிவந்தது.1991 இல் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் அவர்களின் Orgin and Spread Tamils என்ற நூலை தமிழரின் தோற்றமும் பரவும் என்ற பெயரில் புலவர் அவர்கள் மொழிபெயர்த்துளார். பி.டி.சீனிவாச ஐயங்காரின் Pre Aryan Tamil Culture என்பதை ஆரியர்க்கு முந்திய தமிழர் பண்பாடு என்ற தலைப்பில மொழிபெயர்த்தவர். அவரின் மற்றொரு நூலான Stone Age In India என்பதை இந்தியாவில் கற்காலம் என்ற பெயரில் மொழிபெயர்த்தவர்.
புலவர் அவர்களின் பணியை மூன்று வகையில் வகைப்படுத்தலாம்.

சங்க இலக்கிய ஆய்வுப்பணி,மொழிபெயர்ப்புப்பணி,அரசியல் பணி என்பதே அப்பகுப்பு.இவர் பற்றிய முனைவர் பட்ட நிலையில் ஆய்வுகள் வெளிவரும்பொழுதே இவர்தம் தமிழ்ப்பணி உலகுக்கு நிலை நிறுத்தப்படும். இவர் பற்றி விரிவாக எழுதியுள்ளேன்.விரைவில் முழுமையாக வெளியிடுவேன்.

இவர் எழுதிய நூல்கள்
சங்க காலப்புலவர் வரிசை
01.நக்கீரர்
02.பரணர்
03.கபிலர்
04.ஔவையார்
05.பெண்பாற் புலவர்கள்
06.உவமையாற் பெயர் பெற்றோர்
07.காவல பாவலர்கள்
08.கிழார்ப்பெயர் பெற்றோர்
09.வணிகரிற் புலவர்
10.மாநகர்ப் புலவர்கள்-1
11.மாநகர்ப் புலவர்கள் -2
12.மாநகர்ப் புலவர்கள்-3
13.உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றோர்
14.அதியன் விண்ணாத்தனார் முதலிய 65 புலவர்கள்
15.குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்
16.பேயனார் முதலிய 39 புலவர்கள்
17.இலக்கிய வளர்ச்சி
18.இலக்கியப் புதையல் 1.நற்றிணை விருந்து
19.இலக்கியப் புதையல்-2 குறுந்தொகைக் கோவை
20.குறிஞ்சிக்குமரி
21.முல்லைக்கொடி
22.மருதநில மங்கை
23.நெய்தற் கன்னி
24.பாலைச்செல்வி
25.கூத்தன் தமிழ்
26.சாத்தன் கதைகள்
27.திருக்குறள் சொற்பொழிவுகள்
28.மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்
29.காவிரி-கட்டுரைத்தொகுதி
30.சிலம்பொலி
31.புண் உமிழ் குருதி
32.அடுநெய் ஆவுதி
33.கமழ்குரல் ஆவுதி
34.சுடர்வீ வேங்கை
35.வடு அடும் நுண் அயிர்
36.முல்லை
37.வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி
38.மனையுறை புறாக்கள்
39.பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை
40.புலாஅம் பாசறை
41.கட்டுரைத்தொகுப்பு

இலக்கணம்
42.கால்டுவெல்- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்-தமிழாக்கம்
43.செந்தமிழ் எழுதப் பயில
வரலாறு
44.திருமாவளவன்
சங்க கால அரசர் வரிசை
45.சேரர்
46.சோழர்
47.பாண்டியர்
48.வள்ளல்கள்
49.அகுதை முதலிய நாற்பத்து நால்வர்
50.திரையன் முதலிய இருபத்து ஒன்பதின்மர்
51.அறம் உரைத்த அரசர்
52.கலிங்கம் கண்ட காவலர்
53.இலக்கியம் கண்ட காவலர்
54.தமிழர் தளபதிகள்
55.தமிழகத்தில் கோசர்கள்
56.கழுமலப் போர்
57.தமிழர் வாழ்வு
58.தமிழர் பண்பு
59.தமிழர் வாணிகம்
60.பண்டைத்தமிழர் போர்நெறி
61.தமிழர் வரலாறு-தொகுதி-1
62.தமிழர் வரலாறு-தொகுதி-2
63.தமிழர் தோற்றமும் பரவலும்
64.ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
65.தமிழக வரலாறு-சங்க காலம்-அரசர்கள்
66.தமிழக வரலாறு-கோசர்கள்
67.தமிழக வரலாறு -கரிகால் பெருவளத்தான்
68.இந்தியாவில் கற்காலம்
69.குடிமகனின் அடிப்படை உரிமையா?சட்டமன்ற உரிமையா?
(பட்டியலை விரைவில் முழுமைப்படுத்துவேன்)

(என் படைப்புகள் வெளிவரும்வரை எந்தக் குறிப்பும் இல்லாமல் கொன்னே காலம் கழிக்கும் சில தொழில்முறை எழுத்தர்கள் உலகத் தமிழர்களுக்கு என யான் இணையத்தில் வெளியிடும் கட்டுரைகளை அடுத்தடுத்த நாள்களில் தமிழக நாளிதழ்களில், மாத இதழ்களில், மலர்களில் அப்படியேயும், தழுவியும் அவர்கள் பெயரில் எழுதி வெளியிடுவதை வழக்கமாக்கிக் கொண்டு அலைவதைக் கண்ணாரக்கண்டு வருந்துகிறேன். கட்டுரையாளனின் பெயரை நன்றியுடன் குறிப்பிட விரும்பாத இந்த இலக்கியக் கள்வர்கள் திருந்துவது என்றோ? எனச் சவிப்பதைத் தவிர வேறு வழியில்லை).இவர்களின் செயல்கள் தொகுத்துப் பாதுகாக்கப்படுகின்றன. பின்னாளில் கண்காட்சியாக அவை உலகுக்கு வழங்கப்பெறும்.



புலவர் கா.கோவிந்தன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் pdf book Download link
01.
அடுநெய் ஆவுதி
02.
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
03.
இலக்கிய வளர்ச்சி
04.
இலக்கியங் கண்ட காவலர்
05.
இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து
06.
என் தமிழ்ப்பணி
07.
கபிலர்
08.
கமழ் குரல் துழாய்
09.
கலிங்கம் கண்ட காவலர்
10.
கழுமலப்போர்
11.
காலந்தோறும் தமிழகம்
12.
காவிரி-கட்டுரைத்தொகுப்பு
13.
குடிமகனின் அடிப்படை உரிமையா? சட்டமன்ற உரிமையா?
14.
குறிஞ்சிக் குமரி
15.
குறுந்தொகைக் கோவை
16.
சங்ககால அரசர் வரிசை சேரர் சோழர் பாண்டியர்
17.
சங்ககால அரசர் வரிசை திரையன் முதலிய இருபத்து
ஒன்பதின்மர்
18.
சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை பகுதி-1
19.
சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை பகுதி-2
20.
சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை பகுதி-3
21.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - அகுதை முதலிய நாற்பத்து நால்வர்
22.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 65 புலவர்கள்
23.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - உவமையாற் பெயர் பெற்றோர்
24.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றோர்
25.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - ஔவையார்
26.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - காவல பாவலர்கள்
27.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கிழார்ப் பெயர் பெற்றோர்
28.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்
29.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - நக்கீரர்
30.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - பெண்பாற் புலவர்கள்
31.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - பேயனார் முதலிய 39 புலவர்கள்
32.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - வள்ளல்கள்
33.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -பரணர்
34.
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -வணிகறிற் புலவர்கள்
35.
சாத்தன் கதைகள்
36.
சிலம்பொலி
37.
சுடர் வீ வேங்கை
38.
தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்
39.
தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்
40.
தமிழகத்தில் கோசர்கள்
41.
தமிழக வரலாறு கோசர்கள்
42.
தமிழர் தளபதிகள்
43.
தமிழர் தோற்றமும் பரவலும்
44.
தமிழர் வரலாறு
45.
தமிழர் வரலாறு-தொகுதி-1
46.
தமிழர் வரலாறு-தொகுதி-2
47.
திருமாவளவன்
48.
நெய்தற் கன்னி
49.
பண்டைத் தமிழர் போர்நெறி
50.
பாலைச்செல்வி
51.
புண் உமிழ் குருதி
52.
புலா அம்பாசறை
53.
பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை
54.
மருதநில மங்கை
55.
மனையுறை புறாக்கள்
56.
மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்
57.
முல்லை (முல்லைப்பாட்டு ஒரு விளக்கம்)
58.
முல்லைக்கொடி
59.
வஞ்சி மூதூர்
60.
வடு அடுநுண் அயிர்
61.
வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி

மேலும் இவரின் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

Comments

Popular posts from this blog

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ந

திருநெல்வேலி வி.எஸ். சங்கரசுப்ரமிணிய முதலியார் exMLA

                                         (04.10.1902 - 08.09.1976) பிறப்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 4.10.1902ல் திரு. சுப்பிரமணிய முதலியாருக்கும் திருமதி முத்தமாளுக்கும் திருமகனாகப் பிறந்து வளர்ந்து வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள் ளியில் 8ம் வகுப்பு வரையிலும் நெல்லை சி.எம்.சி, சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு மு டி த் தும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1925ல் பி. பட்டமும், 1928ல் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர்.  வாழ்க்கை & இந்திய சுதந்திர போராட்டம்  வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றவர். கல்லூரியில் படித் த காலத்தில் இராணுவப் பயிற்சி பெற்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் பள்ளி மாணவராக இருக்கும் போதே தேசிய பற்றோடு திலகரின் விடுதலை நிதி திரட்டியும், 1921ல் திரு. டி.ஆர், மகாதேவஅய்யருக்கு உறுதுணையாக இருந்து அம்பை வட்டாரத்தில் பெருமளவில் உறுப்பினர் களைச் சேர்த்தவர், நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றிய ஆரம்பத்திலேயே (1930) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்ன இணைத்துக் கொண்டவர். காந்தி மகானின் கவ

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசுதார். மாசிலாமணி முதலியார் - தாயார் சொர்ணத்தம்மாள். மூன்று குழந்தைகளில் இரண்டாம் குழந்தையாக பிறந்தவர